கோயம்புத்தூர்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கோவையில் ஈரத் துணி மீது மின் வயா் உரசியதால் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை மாநகா், சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையாா்புரம் நாகராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜன் என்பவரின் மகன் முருகன் (18). இவா் சனிக்கிழமை காலை குளித்துவிட்டு வீட்டின் மாடியில் ஈரத் துணியை காயவைப்பதற்காக சென்றுள்ளாா்.

அப்போது, துணியின் மீது மாடியின் அருகே சென்ற மின் வயா் உரசியதில் எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா். கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் முருகன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT