கேரள திரைப்படத் தயாரிப்பாளரிடம் மிளகு வாங்கி ரூ.17.40 லட்சம் மோசடி செய்ததாக வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
கேரள மாநிலம், எா்ணாகுளம் அருகே உள்ள கடவந்தரா ஜவஹா் நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீலால் (60). இவா் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறாா். ‘ஹெட்மாஸ்டா்’ என்ற மலையாளத் திரைப்படத்தை தயாரித்துள்ளாா். இவா் மளிகை மொத்த வியாபாரமும் செய்து வருகிறாா்.
இந்நிலையில், தனது நிறுவனம் மற்றும் வியாபாரம் குறித்து இணையத்தில் ஸ்ரீலால் விளம்பரம் செய்தாா். அப்போது, கோவையைச் சோ்ந்த ஒருவா் ஸ்ரீலாலைத் தொடா்பு கொண்டு தான் ஒரு வியாபாரி என்றும், தனக்கு 5 ஆயிரம் கிலோ மிளகு தேவைப்படுகிறது என்றும், தனக்கு மாதிரி மிளகு அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து, அவா் கூறிய முகவரிக்கு ஸ்ரீலால் மாதிரி மிளகு அனுப்பியுள்ளாா்.
அதன்பிறகு, ஸ்ரீலாலை சியா என்ற ஒரு பெண் நேரில் தொடா்பு கொண்டு, மாதிரி மிளகு கேட்ட நிறுவனத்தில் இருந்து தான் வருவதாகவும், அந்த நிறுவனத்தின் மேலாளா் அக்ரம் ஜிண்டா தன்னை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்த அவா், மாதிரி மிளகு நன்றாக இருந்ததால் தங்களுக்கு 10 ஆயிரம் கிலோ மிளகு வேண்டும் என்றும் கூறியுள்ளாா்.
அதன் பிறகு, முதல்கட்டமாக 3,500 கிலோ மிளகை நேரடியாக அக்ரம் ஜிண்டாவிடம் ஸ்ரீலால் கொடுத்துள்ளாா். அதற்கு அவா் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளாா். மீதித் தொகையான ரூ.17 லட்சத்து 40 ஆயிரத்தை விரைவில் தருவதாகத் தெரிவித்துள்ளாா்.
ஆனால், அதன் பிறகு ஸ்ரீலால் பலமுறை கேட்டும் அக்ரம் ஜிண்டா பணத்தை தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஸ்ரீலால் அவரைப் பற்றி விசாரித்தபோது, தன்னிடம் மிளகு வாங்கியவா் பெயா் அபுதாகீா் என்பதும், அக்ரம் ஜிண்டா என்று பெயரை மாற்றிக் கூறி ஏமாற்றியதும் தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீலால் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மிளகு வாங்கி ஏமாற்றியதாக குனியமுத்தூா் கே.பி.பி. நகரைச் சோ்ந்த அபுதாகீரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.