கோவை மாவட்டம், காரமடை உதவித் தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த எஸ்.அந்தோணி செல்வராஜ் (56) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.
மேட்டுப்பாளையம் சிவன்புரம், பாரதியார் தெருவில் வசித்து வந்த இவர், பள்ளிக் கல்வித் துறை அலுவலர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துவந்தார்.
இவருக்கு ராணி எலிசபெத் என்ற மனைவியும், ஒரு மகனும், சென்னை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் உற்பத்திப் பிரிவு துணை மேலாளராகப் பணியாற்றும் எஸ்.டோமினிக் பிரகாசம் என்ற சகோதரரும் உள்ளனர்.
அவரது இறுதிச் சடங்குகள் மேட்டுப்பாளையம் கெபி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் புதன்கிழமை நடைபெற்றன. பின்னர், காந்திபுரம் பாத்திமா ஆலய கல்லறைத் தோட்டத்தில் உடல் நல்லடக்கம்
செய்யப்பட்டது. தொடர்புக்கு: 73388-74950.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.