மதுக்கரை வழியாக கேரளத்துக்கு அதிக மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை இந்து அமைப்பினர் சிறைப்பிடித்தனர்.
நாமக்கல் மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு அளவுக்கு அதிகமாக மாடுகள் ஏற்றிச் செல்லப்படுவதாக இந்து அமைப்பினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுக்கரை அருகே உள்ள சேலம்-கொச்சி புறவழிச் சாலையில் மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் லாரியை சோதனையிட்டதில், அதில், 17 பசுக்கள், 7 கன்றுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றிச் சென்றதாக ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாபுவைக் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் கொண்டு வரப்பட்ட மாடுகள் ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள கோசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.