துடியலூரை அடுத்துள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நரசிம்மநாயக்கன்பாளையம் கணேஷ் நகரில் வசிப்பவர் வி.ரமேஷ். இவர், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பொள்ளாச்சிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், புதன்கிழமை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றுபார்த்தபோது, பீரோவில் இருந்த ரொக்கம், தங்க, வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.