கோவை பீளமேடு அருகே உள்ள பணிமனையில் இயந்திரத்தில் சிக்கி வட மாநிலத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, காவல் துறையினர் கூறியதாவது:
பிகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் (24). இவர், கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள பணிமனை ஒன்றில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.
இந்நிலையில், அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது இயந்திரத்தில் இருந்த பெல்ட் கழன்றதில் சஞ்சீவ்குமாரின் கை இயந்திரத்தினுள் சிக்கியது. அவரது வயிற்றுப் பகுதியும் இயந்திரத்தில் சிக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர் சஞ்சீவ்குமார ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து, பீளமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.