கோயம்புத்தூர்

இருப்பிட மருத்துவ அலுவலரைத் தாக்கியவர்களை கைது செய்யக் கோரி போராட்டம்

கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலரைத் தாக்கியவர்களைக் கைது செய்யக் கோரி அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலரைத் தாக்கியவர்களைக் கைது செய்யக் கோரி அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆதரவற்ற நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கிட்டான் என்பவர் மே 11-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் மே 15-ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஆதரவின்றி இருந்த கிட்டானின் உடல் மருத்துவக் கல்லூரியில் உள்ள உடற்கூறு பிரிவில் வைக்கப்பட்டது.
இந்நிலையில், உடலைப் பெற கிட்டானின் குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை வந்துள்ளனர். அப்போது, ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையில் அவரது பெயர் மாறுபட்டு இருந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று வருமாறு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரவேல் அறிவுறுத்தியுள்ளார்.
அப்போது கிட்டானின் குடும்பத்தாருடன் வந்த சிலர் டாக்டர் சௌந்தரவேலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில், ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து வெங்கடேஷைக் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கில்மோர், பிரகாசன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில், இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரவேல் தாக்கப்பட்டதைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவிசங்கர் தலைமையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, டாக்டர் சௌந்தரவேலைத் தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரையும் கைது செய்யவேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் காவல் துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மருத்துவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT