கோயம்புத்தூர்

தேயிலைத் தொழிற்சாலையில் தீ விபத்து

வால்பாறை அருகே தேயிலைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான தேயிலைத் தூள் உள்ளிட்ட பொருள்கள் சேதமாகின.

DIN

வால்பாறை அருகே தேயிலைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான தேயிலைத் தூள் உள்ளிட்ட பொருள்கள் சேதமாகின.
வால்பாறையை அடுத்த பன்னிமேடு எஸ்டேட்  தொழிற்சாலையில்  இலைகளை கருக வைக்க  பெரிய அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அடுப்புகள் தொழிற்சாலையின் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறையில் புதன்கிழமை காலை 6 மணிக்குத் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர்.  காற்று காரணமாக அடுப்பு பகுதியில் இருந்து பறந்த சென்ற தீப்பொறி  மரத்தூள் மீது விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்தில்  ரூ. 1 லட்சம் மதிப்பிலான தேயிலைத் தூள்,  பொருள்கள்
சேதமாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT