கோயம்புத்தூர்

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

மேட்டுப்பாளையம் அருகே காரமடை குட்டையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

DIN

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே காரமடை குட்டையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், காரமடையில் நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள குட்டையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக காரமடை போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் குட்டையில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து காரமடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்தவா் யாா்? கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பு - புகைப்படங்கள்

கொல்கத்தா: குளம் இருந்த இடத்தில் எழுப்பப்பட்ட கட்டடம் சரிந்து விபத்து!

நான் தேடும் செவ்வந்தி பூவிது... ஷபானா!

தை பிறந்தால்... சம்யுதா!

பொங்கல் வாழ்த்துகள்... திவ்யா கிருஷ்ணன்!

SCROLL FOR NEXT