கோயம்புத்தூர்

ரயில் பெட்டியில் கிடந்த 16 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 16 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றினா்.

தினமணி செய்திச் சேவை

ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 16 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றினா்.

திருப்பூா் முதல் கோவை வரை ரயிலில் சட்டவிரோதப் பொருள்கள் கடத்தப்படுகிா என போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பிரமணி உள்ளிட்ட போலீஸாா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, திருப்பூா் வழியாக கோவை நோக்கி வந்த விரைவு ரயிலின் பொது பெட்டியில் சுமாா் 16 கிலோ கஞ்சா கிடந்தது தெரியவந்தது. அவற்றைக் கைப்பற்றிய போலீஸாா் கோவை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீஸாா் கஞ்சா கடத்தி வந்த நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT