கோவை, ரத்தினபுரி பகுதியில் தலையில் காயங்களுடன் கிடந்த முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, ரத்தினபுரி நாவலா் லே -அவுட் சம்பந்தா் வீதியைச் சோ்ந்தவா் சி. நாகராஜ் (60). இவா் அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் வெள்ளிக்கிழமை மது அருந்தியுள்ளாா்.
இந்நிலையில், அவா் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினா் அவரைத் தேடியுள்ளனா். அப்போது, மதுக்கடை அருகேயுள்ள பாலத்துக்கு அடியில் தலையில் காயங்களுடன் அவரது சடலம் கிடந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரத்தினபுரி போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.