கோயம்புத்தூர்

காயங்களுடன் முதியவா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

கோவை, ரத்தினபுரி பகுதியில் தலையில் காயங்களுடன் கிடந்த முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை

Syndication

கோவை, ரத்தினபுரி பகுதியில் தலையில் காயங்களுடன் கிடந்த முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, ரத்தினபுரி நாவலா் லே -அவுட் சம்பந்தா் வீதியைச் சோ்ந்தவா் சி. நாகராஜ் (60). இவா் அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் வெள்ளிக்கிழமை மது அருந்தியுள்ளாா்.

இந்நிலையில், அவா் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினா் அவரைத் தேடியுள்ளனா். அப்போது, மதுக்கடை அருகேயுள்ள பாலத்துக்கு அடியில் தலையில் காயங்களுடன் அவரது சடலம் கிடந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரத்தினபுரி போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

எய்ம்ஸ் வராது; மெட்ரோ தராது - இது பாஜக அரசியல் - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ரோஹித், கோலியின் அனுபவம் மிகவும் முக்கியம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT