வால்பாறையில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்தனா்.
கோவை மாவட்டம், வால்பாறையில் யானை உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் நுழையும் வன விலங்குகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், வால்பாறை நகா் கக்கன் காலனி சிறுவா் பூங்கா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் சனிக்கிழமை இரவு யானைகள் கூட்டம் நுழைந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா்.
சிலா் பட்டாசுகளை வெடித்தும், சப்தம் எழுப்பியும் நீண்ட நேரம் போராடி யானைகளை வனத்துக்குள் விரட்டினா். சம்பவ இடத்தில் வால்பாறை வனத் துறையினா் முகாமிட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா்.