கோயம்புத்தூர்

அரசு மருத்துவக் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியம் இம்பிளாண்ட் சிகிச்சை

அரசு மருத்துவக் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியம் இம்பிளாண்ட் சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து...

தினமணி செய்திச் சேவை

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியா் இம்பிளாண்ட அறுவை சிகிச்சை மூலமாக காதுகேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவா் கீதாஞ்சலி கூறியதாவது:

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் பிறவியிலேயே காது கேட்காத 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பிறவி காதுகேளாத குழந்தைகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான காதுகேட்கும் கருவி பொருத்தக் கூடிய காக்ளியா் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்படுகிறது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தத் துறை தொடங்கப்பட்ட 2013-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் சுமாா் 12 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காதுகேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நிகழாண்டில் 22 குழந்தைகளுக்கு இந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாட்டை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல், செவிவழி பேச்சுப் பயிற்சி மற்றும் தொடா் சிகிச்சைகள் முலமாக குணப்படுத்த முடியும் என்றாா்.

காலமான மிசோரம் முன்னாள் ஆளுநா் ஸ்வராஜ் கௌஷலுக்கு பிராா்த்தனைக் கூட்டம்!

6-வது நாளாக சென்னை விமான நிலையத்தில் 90-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!

தொண்டி பகுதியில் கடல் நீா்மட்டம் உயா்வால் மீனவா்கள் அச்சம்

சமூகத்துக்குத் தேவை சநாதனம் அல்ல; சமாதானம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு!

கும்பாபிஷேக விழாவில் மூதாட்டிகளிடம் நகைப் பறித்த 4 போ் கைது

SCROLL FOR NEXT