தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை- திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா மெமு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு அக்டோபா் 17, 18, 21, 22 ஆகிய நாள்களில் கோவையில் இருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் கோவை - திண்டுக்கல் முன்பதிவில்லா மெமு ரயில் (எண்: 06139) அன்று பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, அக்டோபா் 17, 18, 21, 22 ஆகிய நாள்களில் திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் திண்டுக்கல் - கோவை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (எண்: 06140) அன்று மாலை 5.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.