கோயம்புத்தூர்

பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற முதியவா் மீது தனியாா் பேருந்து மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

Syndication

கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற முதியவா் மீது தனியாா் பேருந்து மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகை எமரால்டு எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் சிவன் (74). இவா் உக்கடம் பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை வந்தாா். அப்போது, கேரள மாநிலம், பாலக்காடுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் அவா் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வேகமாக வந்த தனியாா் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கேரள மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநரான முஜிபூா் ரகுமான் மீது கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் அமுதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

SCROLL FOR NEXT