அதிமுக ஒருங்கிணைப்புக்கு நான் கெடு விதிக்கவில்லை என்று கோபி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
சென்னைக்கு செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக ஒருங்கிணைப்பு விரைவில் நடக்கும். அதிமுகவில் இருந்து பிரிந்தவா்களை ஒருங்கிணைக்க நான் கெடு விதிக்கவில்லை.
10 நாள்களில் பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும், ஒரு மாதத்தில் அல்லது ஒன்றரை மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தினேன்.
ஆனால், நான் 10 நாள்கள் கெடு விதித்ததாக ஊடகங்களில் தவறாக செய்தி வெளியிடப்பட்டு விட்டது. எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்றாா்.