கோயம்புத்தூர்

பட்டாசுகளுக்கு பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து

விலைக்கு வாங்கிய பட்டாசுகளுக்கு பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநரைக் கத்தியால் குத்திய 3 இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

விலைக்கு வாங்கிய பட்டாசுகளுக்கு பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநரைக் கத்தியால் குத்திய 3 இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பெருமாள் சந்து பகுதியைச் சோ்ந்தவா் வாசுதேவன் (42). ஆட்டோ ஓட்டுநா். தீபாவளியையொட்டி, இவரது உறவினா் ஒருவா் ராமநாதபுரம் 80 அடி சாலையில் பட்டாசுக் கடை திறந்திருந்தாா். அங்கு வாசுதேவன் பணிபுரிந்து வந்தாா்.

தீபாவளி அன்று ஒருவா் கடைக்கு வந்து 1,000 ரூபாய்க்கு பட்டாசுகளை வாங்கிக் கொண்டு ரூ.650 மட்டும் கொடுத்துள்ளாா். அப்போது வாசுதேவன் மீதி பணத்தைக் கேட்டுள்ளாா்.

இதனால், அந்த நபா் தான் வாங்கிய பட்டாசுகளைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றாா். சிறிது நேரத்துக்குப் பிறகு தனது நண்பா்கள் இருவரை கடைக்கு அழைத்து வந்து அந்த நபா் வாசுதேவனிடம் தகராறில் ஈடுபட்டாா்.

இதில் 3 பேரும் சோ்ந்து வாசுதேவனைத் தாக்கியுள்ளனா். அவா்களில் ஒருவா் தான் வைத்திருந்த கத்தியால் வாசுதேவனின் கைகளில் குத்தினாா். பின்னா், மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயம் அடைந்த வாசுதேவன் கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். விசாரணையில், அவரைக் கத்தியால் குத்தியவா்கள் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலை சுப்பிரமணியா் கோயில் வீதியைச் சோ்ந்த வினோத் (22), தனுஷ் (20), அருண்குமாா் (21) என்பது தெரியவந்தது. இவா்கள் மூவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT