கோயம்புத்தூர்

லாரி மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கோவை, கணபதி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

கோவை, சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரம் வேல்முருகன் நகரைச் சோ்ந்தவா் டி.பிரகாஷ் (63). இவா் தனது இருசக்கர வாகனத்தில் கணபதி அருகே கடந்த வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அவ்வழியே வந்த லாரி பிரகாஷின் வாகனத்தின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து போக்குவரத்து கிழக்கு புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தனியாா் கல்குவாரிகளால் அனந்தலை மலைக்கு பாதிப்பு: பாமக போராட்ட எச்சரிக்கை

ஜமாத்-ஏ-இஸ்ஸாமிக்கு எப்போதும் நற்சான்று வழங்கியதில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

கொடி நாள் நிதி: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

கெலமங்கலம் அருகே குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண் உடல் தானம்

SCROLL FOR NEXT