முகப்பு
கோயம்புத்தூர்

கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பூரில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 24 மே 2026, 1:58 am IST
பகிர்:

திருப்பூரில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாநகர வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரயில் நிலையம் அருகே மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சாலையோரத்தில் கிடந்த பையை கைப்பற்றி போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அதில் சுமாா் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தி வந்த நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement