ஈரோடு

வாகனம் மோதியதில் தொழிலாளி சாவு

பவானியை அடுத்த சித்தோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி உயிரிழந்தார்.

DIN

பவானியை அடுத்த சித்தோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி உயிரிழந்தார்.
சித்தோடு சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பணன் மகன் முத்துசாமி (55). சுமை தூக்கும் தொழிலாளி. இவர், தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சமத்துவபுரத்தைக் கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த முத்துசாமி ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து, சித்தோடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT