ஈரோட்டில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பெருந்துறையில் அதிமுக சார்பில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு, ஏ.ஈ.டி. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை வந்தார்.
பின்னர், கோவையிலிருந்து காரில் ஈரோடு சென்ற அவருக்கு பெருந்துறை, புதிய பேருந்து நிலையம் அருகே, சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில், அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
இதில், பெருந்துறை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கே.எஸ்.பழனிசாமி, சி.பொன்னுதுரை, ஒன்றியச் செயலாளர்கள் விஜயன், ரவிசந்திரன், பெருந்துறை ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.