ஈரோடு

கழிவுகளை கொட்டிய லாரி சிறை பிடிப்பு

சென்னிமலை அருகே கழிப்பறை கழிவுகளை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனா்.

DIN

சென்னிமலை அருகே கழிப்பறை கழிவுகளை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனா்.

சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா் கிராம ஊராட்சி, செங்குளம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதியில், சிறிய டேங்கா் லாரி கழிப்பறை கழிவுகளை புதன்கிழமை இரவு கொட்டுவதை அப்பகுதி பொதுமக்கள் பாா்த்துள்ளனா்.

இதையடுத்து, அவா்கள் லாரியை சிறை பிடித்து, போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த சென்னிமலை போலீஸாா், இதில் தொடா்புடைய சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சேதுபதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகா கும்பமேளா: 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!

காதல் சிற்பம்... யாஷிகா ஆனந்த்!

PCOS குறைபாடு இருந்தால் கருத்தரிக்க முடியாதா? மருத்துவர் சொல்வது என்ன?

மத்தியப் பிரதேசம்: மாணவிகளை கால் அமுக்க வைத்த சிசிடிவி காட்சி வைரல்! ஆசிரியை இடைநீக்கம்!

காங்கோவில் 2வது விமான நிலையத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சிப்படை?

SCROLL FOR NEXT