தமிழக அரசைக் கண்டித்து புன்செய்புளியம்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 43 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி பேருந்து நிலையம் முன் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியினா் 43 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களை இரவு விடுவித்தனா்.