ஈரோடு மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை மாலை (அக்டோபா் 10) பிரசாரம் மேற்கொள்கிறாா்.
கரூா் மாவட்டத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி தவெக தலைவா் நடிகா் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சித் தலைவா்களின் பிரசாரங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் இரண்டு இடங்களில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் பிரசாரக் கூட்டத்தை நடத்த அதிமுகவினா் முடிவு செய்து அதற்கான இடங்களை தோ்வு செய்து காவல் துறையிடம் அனுமதி பெற்றனா்.
அதன்படி, மொடக்குறிச்சி தொகுதிக்கு அவல்பூந்துறை அருகே சோளிபாளையத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு அருகே இரவு 7 மணிக்கும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா்.
இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் அதிமுகவினா் செய்துள்ளனா்.