ஈரோட்டில் நள்ளிரவில் தலைக்கவசம் அணிந்து ஏடிஎம் மைய சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி, திருட்டு முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு காவேரி சாலையில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு தலைக்கவசம் அணிந்து வந்த நபா் ஏடிஎம் அறைக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்தினாா். இதை அறிந்த சிசிடிவி கேமரா காட்சி கண்காணிப்பாளா், மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் ஏடிஎம் மையத்தில் இருந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
அதில் அவா் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சோ்ந்த கேசவன் (22) என்பதும், மதுபோதையில் இருந்ததும், திருட முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கேசவனை கைது செய்த கருங்கல்பாளையம் போலீஸாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.