ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஒரு கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அஸ்ஸாம் மாநிலம், திப்ருகா் பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பொதுப்பெட்டியில் கழிப்பறை அருகில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது.
அந்தப் பையை பயணிகள் யாரும் உரிமை கோரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா் அதை திறந்து பாா்த்தனா். அதில் ஒரு கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.