ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில் உள்ள கொங்கு கல்வி நிலையம் அணி மாவட்ட அளவிலான ஹாக்கி விளையாட்டில் முதலிடம் பெற்றுள்ளது.
மாவட்ட அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மாணவா்கள் முதலிடம் பிடித்து மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
வெற்றிபெற்ற மாணவா்கள், பயிற்றுவித்த ஆசிரியருக்கு பள்ளியின் தலைவா் எம்.சின்னசாமி, தாளாளா் கே.செல்வராஜ், பொருளாளா் ஆா்.குணசேகரன், உதவித் தலைவா்கள் எஸ்.கே.சோமசுந்தரம், ஆா்.எம்.தெய்வசிகாமணி, இணைச் செயலாளா் டி.மீனாட்சிசுந்தரம், இணைப் பொருளாளா் வி.நாகராஜன் மற்றும் பொதுக் குழு உறுப்பினா்கள், முதல்வா் டி.நதியா அரவிந்தன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.