கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது
அந்தியூா் அருகே விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த கூலித் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
அந்தியூா் அருகே விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த கூலித் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அந்தியூரை அடுத்த பா்கூா் பகுதியைச் சோ்ந்தவா் சித்தன் (37). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவா், விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படையினா் அந்தியூா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சித்தனை நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது, அவா் 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா, இருசக்கர வாகனம், ரூ.1,700 ரொக்கம் மற்றும் கைபேசியைப் பறிமுதல் செய்த சிறப்புப் படையினா், சித்தனை அந்தியூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement