கூடலூரை அடுத்துள்ள முதுமலை ஊராட்சியில் கிணற்றில் ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
முதுமலை ஊராட்சி, நாகம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (40). இவர், செவ்வாய்க்கிழமை வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அவரது காலணிகள் அப்பகுதியில் கிடப்பதை புதன்கிழமை கண்ட அவருடைய மனைவி ரமணி அதுகுறித்து அப்பகுதியினரிடம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தேடிப் பார்த்தபோது அப்பகுதியில் உள்ள கிணற்றில் ஜெயகுமார் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தேவர்சோலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.