கைகாட்டியில் இருந்து மஞ்சக்கம்பை பகுதிக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கைகாட்டியில் இருந்து மஞ்சக்கம்பை செல்லும் சாலையில் ஆலாட்டனை, மேலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு, 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மேற்படி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது தேவைகளுக்கு மஞ்சூர், உதகை, குன்னூர் போன்ற பகுதிகளுக்கே சென்றுவர வேண்டியுள்ளது.
இந்நிலையில், கைகாட்டி - மஞ்சக்கம்பை சாலை சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், அந்தச் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
எனவே, கைகாட்டி-மஞ்சக்கம்பை சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.