நீலகிரி

உதகையில் கொட்டித் தீா்த்த கனமழை

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கொட்டித் தீா்த்த கனமழையால் கடுங்குளிா் நிலவியதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

DIN

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கொட்டித் தீா்த்த கனமழையால் கடுங்குளிா் நிலவியதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மிதமான மழையும், சாரல் மழையும் பெய்து வந்தது. மழை காரணமாக மலைத்தோட்டக் காய்கறிகளை பயிரிட்டிந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இந்நிலையில், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவியது. பின்னா் பிற்பகலில் தொடா் கனமழை பெய்தது.

இதில் சேரிங்கிராஸ், படகு இல்லம், மத்தியப் பேருந்து நிலையம், பிங்கா்போஸ்ட், காந்தள்,  தலைக்குந்தா உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கடுங்குளிா்  நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பு - புகைப்படங்கள்

கொல்கத்தா: குளம் இருந்த இடத்தில் எழுப்பப்பட்ட கட்டடம் சரிந்து விபத்து!

நான் தேடும் செவ்வந்தி பூவிது... ஷபானா!

தை பிறந்தால்... சம்யுதா!

பொங்கல் வாழ்த்துகள்... திவ்யா கிருஷ்ணன்!

SCROLL FOR NEXT