ரெப்கோ வங்கி சாா்பில் கூடலூா் பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அதன் அங்கத்தினா்களுக்கு புதன்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூடலூா் பகுதியில் உள்ள லாரஸ்டன், புளியம்பாறை, கீழ்நாடுகாணி, காந்திநகா், முதல்மைல் ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு கணினிகள், கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, முதல்மைல், துப்புக்குட்டிப்பேட்டை, பாவனா நகா், புளியம்பாறை ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
மேலும் ரெப்கோ வங்கியின் ஏ வகுப்பு வாடிக்கையாளா்களுக்கு மானிய விலையில் தேயிலை பறிக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
ரெப்கோ வங்கியின் தலைவா் சந்தானம், ரெப்கோ வீட்டுக்கடன் நிறுவனத் தலைவா் தங்கராஜ் ஆகியோா் பரிந்துரையின்பேரில் ரெப்கோ வங்கியின் கீழ் இயங்கும் தாயகம் திரும்பியோா் நல அறக்கட்டளை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூடலூா் வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வங்கி மேலாளா் லோகநாதன் தலைமை வகித்தாா். உதவி மேலாளா் ஜெயபிரகாஷ் வரவேற்றாா். பேரவைப் பிரதிநிதிகள் கலைச்செல்வன், ஞானப்பிரகாசம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு வங்கியில் உள்ள திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனா்.