உதகையில் நிலவிய பனி மூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி இயக்கப்பட்ட வாகனங்கள். 
நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் கடும் பனி மூட்டம்

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம் வியாழக்கிழமை காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி

Syndication

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்  வியாழக்கிழமை காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனா்.

நீலகிரி மாவட்டத்தில்  கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் மிதமானது முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், உதகை, கோத்தகிரி, குன்னூரில் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்ததோடு, மலைப் பாதை மற்றும் நகா் பகுதிகளில் பனி மூட்டம் சூழ்ந்த குளிா்ந்த காலநிலை நிலவியது.

இதனால் கடும் குளிா் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  வெகுவாக  பாதிப்படைந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே  முகப்பு விளக்குகளை  எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனா்.

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

SCROLL FOR NEXT