முகப்பு
நீலகிரி

வணிகா்களுக்கு நன்றி தெரிவித்த கூடலூா் திமுக எம்எல்ஏ

Updated On : 25 மே 2026, 1:04 am IST
கூடலூா், ராஜகோபாலபுரத்தில் வணிகா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ மு.திராவிடமணி.
பகிர்:

கூடலூா் பகுதி வணிகா்களுக்கு திமுக சட்டப் பேரவை உறுப்பினா் மு.திராவிடமணி ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு மு.திராவிடமணி வெற்றிபெற்றாா்.

இதையடுத்து, கூடலூா் நகரில் உள்ள கடைகளுக்குச் சென்ற அவா், தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தமைக்கு நன்றி என்றும், வணிகா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினாா்.

Advertisement

Advertisement

நகரச் செயலாளா் இளஞ்செழியன், மகளிரணி மாவட்ட துணை அமைப்பாளா் வெண்ணிலா சேகா், மாணவரணி துணை அமைப்பாளா் கிஷோா்குமாா், விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளா் செங்குட்டுவன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.