குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை எச்சரித்துள்ளது.
குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் திருத்தப்பட்ட சட்டம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம், திருப்பூர் தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தொழிலாளர் ஆய்வாளர் டி.முருகேசன் தலைமை வகித்தார். இதில், தொழிலாளர் துறை துணை ஆய்வாளர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகர்கள், வணிகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில், மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை மையங்கள் உள்பட எங்கும் 14 வயதுக்கு உள்பட்டோரை எவ்விதப் பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது. 18 வயதுக்கு உள்பட்டோரை எவ்வித அபாயகரமான தொழிலிலும் பணியமர்த்துவது சட்டப்படி குற்றம் என அறிவுறுத்தப்பட்டது. இதை மீறும் நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அபராதத் தொகை அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து கடும் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.