துணைமின் நிலையப் பராமரிப்புப் பணிகள் காரணமாக மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சோமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் காமராஜ் கூறியுள்ளது:
பூமலூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் ஜூன் 8-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை துணைமின் நிலையத்துக்கு உள்பட்ட மங்கலம், பூமலூர், மலைக்கோயில், அஹ்ரஹாரபுதூர், பள்ளிபாளையம், இடுவாய் (ஒரு பகுதி), பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துரைப்புதூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.