திருப்பூர்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிா்ப்பு தின விழிப்புணா்வு

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிா்ப்பு தினம் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிா்ப்பு தினம் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மற்றும் விழுதுகள் தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூடுதல் மாவட்ட ஆட்சியா் பல்லவி வா்மா தலைமை வகித்து பேரணியை தொடங்கிவைத்தாா்.

கல்லூரி முதல்வா் ஜோ.நளதம், மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிா் திட்டத்தின் இணை இயக்குநா் மதுமதி, மாவட்ட சமூக நல அலுவலா் அம்பிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழுதுகள் சந்திரா வரவேற்றாா். விழுதுகள் இயக்குநா் தங்கவேல், மாவட்ட சட்டப் பணிகள் குழு வழக்குரைஞா் திங்களவள், அவிநாசி மகளிா் காவல் ஆய்வாளா் கீதா ஆகியோா் பேசினா். விழுதுகள் திட்ட மேலாளா் கோவிந்தராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். சாரதாம்பாள் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொங்கல் வாழ்த்துகள்... திவ்யா கிருஷ்ணன்!

மெட்டா பணியாளர்களுக்கு ரூ. 4 கோடியுடன் பணிநீக்கம்!

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்… கீதா செல்வராஜன்!

காஸா போர்நிறுத்த ஒப்பந்தம்: வரைவு அறிக்கை ஹமாஸ் தரப்பால் ஏற்பு!

எந்தன் நெஞ்சில் நீங்காத... மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT