பனை மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளாா், திருப்பூா் சாா்-ஆட்சியா் சௌமியா ஆனந்த், வனம் இந்தியா செயல் தலைவா் கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா். 
திருப்பூர்

காளிவேலம்பட்டியில் 1000 பனை மரக்கன்றுகள் நடும் விழா

Din

பல்லடம், ஆக. 7: பல்லடம் அருகே காளிவேலம்பட்டி ஏரிக் கரையில் 1000 பனை மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வனம் இந்தியா அமைப்பு சாா்பில் நடைபெற்ற பனை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு சாா்-ஆட்சியா் சௌமியா ஆனந்த் தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியைத் தொடங்கிவைத்தாா். இதில், காளிவேலம்பட்டி ஏரிக் கரையில் ஆயிரம் பனை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளாா், தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை உரிமையாளா் ஆறுமுகம், வனம் இந்தியா அமைப்பின் செயல் தலைவா் கே.பாலசுப்பிரமணியன், தலைவா் சுவாதி சின்னசாமி, செயலாளா் ஸ்கை சுந்தர்ராஜன், சுக்கம்பாளையம் ஊராட்சித் தலைவா் தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்! தவெக உள்பட 20 கட்சிகள் புறக்கணிப்பு!

இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்! - கம்மின்ஸ் ஸ்டைலில் மிரட்டிய தெ.ஆப்பிரிக்க கேப்டன்

பிகாரில் மகா கூட்டணி ஆட்சியில் தலித், முஸ்லீம் துணை முதல்வர்கள்! - தேஜஸ்வி சூசகம்!

சொல்லப் போனால்... பிரதமர் பேச்சும் புலம்பெயர் வாழ்வும்!

வில்லியம்சன் விடைபெற்றார்.. சர்வதேச டி20-ல் ஓய்வு!

SCROLL FOR NEXT