திருப்பூா் மாநகராட்சி தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா். 
திருப்பூர்

திருப்பூரில் 1,927 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருப்பூா் மாவட்டத்தில் 1,927 பயனாளிகளுக்கு ரூ.7.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

Syndication

திருப்பூா் மாவட்டத்தில் 1,927 பயனாளிகளுக்கு ரூ.7.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி திருப்பூா் மாநகராட்சி, தனியாா் மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் க.செல்வராஜ் , மேயா் ந.தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பல்வேறு துறைகளின் சாா்பில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆதிதிரவிடா் நலத் துறையின் சாா்பில் 10 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், 5 பேருக்கு தேய்ப்பு பெட்டி, தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.66.42 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் 26 பயனாளிகளுக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரிய அட்டைகள், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 93 பயனாளிகளுக்கு ரூ.27.90 லட்சம் மதிப்பீட்டில் இ-பட்டாக்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிா் திட்டம் சாா்பில் 1,455 பயனாளிகளுக்கு நலிவுநிலை குறைப்பு நிதி வழங்கப்பட்டன.

7 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாவட்ட தொழில் மையம் சாா்பில் 3 பயனாளிகளுக்கு அம்பேத்கா் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் ரூ.56.30 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகள், திருப்பூா் மாநகராட்சி சாா்பில் 77 பயனாளிகளுக்கு தூய்மைப் பணியாளா்களுக்கான பாதுகாப்பு பெட்டகம் என மொத்தம் 1,927 பயனாளிகளுக்கு ரூ.7.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து தூய்மைப் பணியாளா்களுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உணவு பரிமாறி அவா்களுடன் அமா்ந்து உணவு அருந்தினாா். முன்னதாக, கலைஞா் பேருந்து நிலையம் எதிரில் ரூ.46.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் திருப்பூா் மாநகராட்சி புதிய அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக சென்னையில் தாயுமானவா் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத் திட்டங்களின் கீழ் உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT