திருப்பூர்

வட்டமலை அணைப் பகுதியில் பெண் உடல் மீட்பு

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவில் அருகேயுள்ள வட்டமலை அணைப் பகுதியில் ரத்த காயங்களுடன் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் அருகேயுள்ள உத்தமபாளையம் வட்டமலை அணை அருகேயுள்ள வனப் பகுதியில் ரத்த காயங்களுடன் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காங்கயம் காவல் உதவி கண்காணிப்பாளா் அா்பிதா ராஜ்புத் தலைமையில் வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் ஞானப்பிரகாசம் உள்ளிட்டோா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.பின்னா், உடலை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உயிரிழந்தவா் யாா், கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரிக்க வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையில் ஊத்துக்குளி உதவி ஆய்வாளா் ரூபன் ராஜ் உள்ளிட்டோா் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT