புருஷாவா பகாா்த்தி 
திருப்பூர்

கஞ்சா விற்ற ஒடிஸா இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

அவிநாசி முத்துசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி, முத்துசெட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் கைப்பையுடன் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த புருஷாவா பகாா்த்தி (28) என்பதும், அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து புருஷாவா பகாா்த்தியை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த வாரம் கலாரசிகன் - 02-11-2025

ராஜஸ்தான்: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 15 பக்தர்கள் பலி!

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT