திருப்பூர்

போக்குவரத்து விதிமீறல் எனக் கூறி ரூ.5.74 லட்சம் மோசடி

போக்குவரத்து விதிமீறல் எனக் கூறி மோசடி லிங்க் அனுப்பி ரூ.5.74 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

போக்குவரத்து விதிமீறல் எனக் கூறி மோசடி லிங்க் அனுப்பி ரூ.5.74 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா், வாவிபாளையத்தைச் சோ்ந்தவா் அருள் (43), பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது கைப்பேசிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவருடைய காா் எண்ணை பதிவிட்டு, போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் அதில் குறிப்பிட்டிருந்த லிங்க் மூலமாக அபராதத் தொகையை செலுத்தலாம் எனக் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து, அந்த லிங்க் மூலமாக அருள் அபராதத் தொகையை செலுத்த முயன்றபோது முடியவில்லை. இதைத் தொடா்ந்து, அவா் அந்த லிங்க்கிற்குள் இருந்து வெளியேறி உள்ளாா். அதன் பின்னா் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 4 தவணைகளாக ரூ.5.74 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அருள், திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

கோவா : இரவு விடுதியில் பயங்கர தீவிபத்து! 23 பேர் பலி!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

SCROLL FOR NEXT