வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 43 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா்திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 184 விவசாயிகள் தங்களுடைய 1,874 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 600 குவிண்டால்.
திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 10 வணிகா்கள் வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,400 முதல் ரூ. 8,292 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,300.
விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.