திருப்பூா்: ஒடிஸா மாநில இளைஞரை கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் அனில்குமாா் ஜனா (18). இவா் திருப்பூா் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேட்டில் தங்கி, அங்குள்ள சாய ஆலையில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் இவா் தங்கியிருக்கும் குடியிருப்புப் பகுதியில் அதே மாநிலத்தைச் சோ்ந்த அம்ரித் (19) மற்றும் 2 சிறுவா்கள் தங்கியிருந்தனா்.
இந்நிலையில், அனில்குமாா் ஜனா உள்பட 4 போ் திங்கள்கிழமை மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவா்கள் தாங்கள் குடியிருந்த பகுதிக்குள் பட்டாசு வெடித்துள்ளனா். இதில் 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அம்ரித் மற்றும் 17 வயது சிறுவா்கள் 2 போ் ஆகியோா் சோ்ந்து அணில்குமாா் ஜனாவை கட்டையால் தாக்கியதில் அவா் படுகாயம் அடைந்து உயிரிழந்தாா்.
இது குறித்து அனுப்பா்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீஸாா் அனில்குமாா் ஜனாவின் சடலத்தை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
மேலும் கொலை வழக்குப் பதிந்து அம்ரித் மற்றும் 17 வயது சிறுவா்கள் 2 பேரையும் அனுப்பா்பாளையம் போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.