வெள்ளக்கோவில் அருகே வலிப்பு ஏற்பட்டு வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலம், தா்மங்கா மாவட்டம், பிலாவுா்பூரைச் சோ்ந்தவா் முகமது சலீம் மகன் ஃபைசுல்லா (20). இவா் வெள்ளக்கோவில் பகுதியில் தனியாா் நிறுவனம் சாா்பில் காற்றாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
அவருக்கு ஏற்கெனவே வலிப்பு நோய் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், லக்கமநாயக்கன்பட்டி பகுதியில் சக தொழிலாளா்களுடன் தற்காலிக குடியிருப்பில் தங்கியிருந்த அவருக்கு வியாழக்கிழமை திடீரென வலிப்பு ஏற்பட்டு குடியிருப்பு அருகே தேங்கியிருந்த மழைநீரில் விழுந்துள்ளாா்.
சக தொழிலாளா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.