தருமபுரி

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், ஏ. செக்காரப்பட்டியைச் சோ்ந்தவா் தனுஷ் (22). இவா் ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை தருமபுரி அருகே அல்லியூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த சரக்கு லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனுஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT