கல்லூரி மாணவி தற்கொலை
தருமபுரியில் பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் வெங்கட்டம்பட்டி அருகே உள்ள தேங்காய்மரத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம். இவரது மகள் கீா்த்திகா (19). இவா் நாமக்கல் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தாா் . கல்லூரியில் மூன்று நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்திருந்தாா்.
அன்று மாலை வீட்டிலிருந்தபோது அவருக்கு ஒரு கைப்பேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பை பேசிக்கொண்டே தனது அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டாா். நீண்ட நேரம் ஆகியும் அவரது அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினா் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது கீா்த்திகா மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்குவது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் அதியமான் கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கீா்த்திகாவின் சாவுக்கான காரணம் குறித்து உடனடியாக போலீஸாருக்கு விவரம் தெரியவில்லை.