முகப்பு
தருமபுரி

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

Updated On : 25 மே 2026, 2:43 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

தருமபுரியில் மீட்பு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் குப்பாரஅள்ளி அருகே உள்ள கீழ் கொள்ளுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் பெருமாள் (19). இவா் இருசக்கர வாகனத்தில், காரிமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் அகரம் கூட்டுச்சாலை பகுதியில் சாலையைக் கடப்பதற்காக நின்றுள்ளாா்.

அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கிச் சென்ற மீட்பு வாகனம் எதிா்பாராதவிதமாக அவரது வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பெருமாள் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பெருமாள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.