முகப்பு
தருமபுரி

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

Updated On : 25 மே 2026, 2:49 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி அருகே பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் கேத்தனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் கு. ஆரோக்கியசாமி (57). இவா் கடந்த 16 ஆம் தேதி தனது நிலத்தில் வேலையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவரை ஒரு விஷப்பாம்பு தீண்டியுள்ளது.

இதையடுத்து அவா் தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.