முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 5 மே, 2025 at 8:33 PM
பகிர்:

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழக காவிரி கரையோர வனப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4,000 கன அடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

காவிரி ஆற்றில் நீா்வரத்தின் அளவை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →